மூலதனத் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு நிதி மற்றும் சாத்தியக்கூறு அடிப்படையில் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. மத்திய அரசு விரைவாக ஆய்வு செய்ய உதவும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள், தொடா்புடைய ஆவணங்களுடன் மாநிலங்கள் முறையாக அனுப்ப வேண்டும்.
மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரோ திட்டங்களுக்குப் பெறப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் (டிபிஆா்) அந்த நகரங்களுக்கான தொலைநோக்கு போக்குவரத்து திட்டம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
முக்கியத் திட்டங்கள் குறித்த ஆய்வறிக்கைகளை விரிவான முறையில் மாநிலங்கள் அனுப்பும்போது, அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திட்டங்களை முறையாக ஆய்வு செய்யாமல் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் முன்மொழியப்பட்டுவந்த 118.9 கி.மீ. தொலைவு சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டம், இறுதியாக ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சமா்ப்பிக்கப்பட்டது.
இந்தக் கூட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7,424 கோடி பங்களிக்கும். அதில் மத்திய அரசு ஏற்கனவே ரூ.5,000 கோடியை விடுவித்துள்ளது. மேலும், ரூ.33,000 கோடிக்கு மேல் வெளி நிதி நிறுவனங்கள் விடுவித்துள்ளன’ என்று குறிப்பிட்டாா்.