மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி – வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள்.
சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல் துணை கண்காணிப்பாளர் காயத்ரி திவாரி தெரிவித்தார்.
சிதியிலிருந்து பஹ்ரி நோக்கி லாரியும், ஒரு குடும்ப உறுப்பினர்களுடன் மைஹார் நோக்கிச் சென்ற வாகனமும்( SUV டாக்ஸி சேவை) நேருக்கு நேர் மோதியதாக அவர் கூறினார்.
அதில் வாகனத்தில் பயணித்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரி கூறினார். காயமடைந்த 14 பேரில், ஒன்பது பேர் மேல் சிகிச்சைக்காக ரேவாவுக்கு அனுப்பப்பட்டனர்.