மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : 1974-ல் கலைஞர் ஏற்றிய ‘மாநில உரிமை’ சுடர் | My Vikatan article about The ‘State Rights’ Torch Lit by Kalaignar in 1974

Spread the love

பிரிவினை அல்ல… ஒருமைப்பாடு!

அப்போதே “மாநில சுயாட்சி பேசினால் நாடு பிளவுபட்டுவிடும்” என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு கலைஞர் அளித்த பதில் இன்றும் காலத்தால் அழியாதது: “மாநில சுயாட்சி என்பது நாட்டைப் பிரிப்பதற்கல்ல; நாட்டை வலுப்படுத்துவதற்கே!”

மத்தியில் அதிகாரம் குவிந்து கிடப்பதைவிட, அதிகாரப் பங்கீடு முறையாக இருந்தால் மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்பதைத் தமிழகம் அன்றே உரக்கச் சொன்னது.

கருணாநிதி -  அண்ணா

கருணாநிதி – அண்ணா

இன்றும் ஒலிக்கும் எதிரொலி!

1974-ல் ஏற்றப்பட்ட அந்தச் சுயாட்சிச் சுடர், இன்று நாடு முழுவதும் உள்ள மாநில உரிமை இயக்கங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்க்காரியா கமிஷன் முதல் இன்று வரை மத்திய-மாநில உறவுகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், கலைஞரின் அந்தத் தீர்மானமே முதன்மையான சான்றாக நிற்கிறது.

நிர்வாக வேகம், மக்கள் நலன், மாநிலங்களின் சுயமரியாதை எனப் பல கோணங்களில் இந்தத் தீர்மானம் இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல். மத்திய ஆட்சியின் ஆதிக்கம் அல்ல… அதிகாரப் பங்கீடும், சமநிலையுமே இந்திய ஒன்றியத்தை உண்மையாக வலுப்படுத்தும் என்பதை இந்த வரலாறு நமக்கு இன்றும் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *