மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.
அப்போது பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், குறிப்பாக தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 12 லட்சம் வரை இனி வருமான வரி இல்லை என்று அறிவித்தார்.
மேலும், பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அந்த மாநிலத்திற்கு மட்டும் பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.