மனநலப் பிரச்​சினை ஏற்​பட்​டால் தாமதமின்றி மருத்​து​வரை அணுக வேண்​டும்: மனநல மருத்​து​வர் கவுதம் அறி​வுறுத்​தல் | Psychiatrist Gautham advises for mental health problems

1379398
Spread the love

சென்னை: உலக மன நல தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டது. இதை யொட்​டி, சென்னை பல்​கலைக்​கழக உளவியல் துறை, எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யின் உளவியல் துறை மற்​றும் டாக்​டர் கவுதம் நரம்​பியல் மையம் சார்​பில் நுங்​கம்​பாக்​கம் எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி​யில் விழிப்​புணர்வு நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்ற சிறப்பு விருந்​தினர்​கள் பேசி​ய​தாவது:

மருத்​து​வர் கவுதம் உடுப்​பி: உடல் உறுப்​பு​கள் பாதிக்​கப்​பட்​டால் உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறோம். ஆனால், மனநலம் பாதிக்​கப்​பட்​டால் பலரும் அதை சரி​யாக கவனிப்​ப​தில்​லை. போகப் போக சரி​யாகி​விடும் என் கின்​றனர். இது சரியல்ல. மனநலப் பிரச்​சினை என்​பது மூளை​யுடன் தொடர்​புடையது. எனவே, உடல் பிரச்​சினைக்கு மருத்​துவ ஆலோ​சனை பெறு​வதைப் போல​வே, மூளை​யில் பிரச்​சினை ஏற்​பட்​டாலும், தாமதம் செய்​யாமல் உடனடி​யாக அதற்​கான மருத்​து​வரை அணுகி ஆலோ​சனை பெற வேண்​டும்.

நடிகர் மோகன்​ராம்: நடிகர்​கள் அதிக அளவில் மனநலம் சார்ந்த பிரச்​சினைக்கு ஆளாகின்​றனர். எனக்கு தெரிந்து நடிகர்​கள் பலரும் தேவையற்ற கவலை, மன அழுத்​தம் போன்ற பிரச்​சினை​களை எதிர்​கொள்​கின்​றனர். வெளி​நாட்டு திரைப்​படங்​களில் மனநலப் பிரச்​சினை​களை நல்ல கதை​யம்​சத்​தோடு வழங்​கு​கின்​றனர்.

மனநலப் பிரச்​சினை தொடர்​பாக திரைப்படம் எடுப்​பவர்​கள் பொறுப்​புணர்​வுடன் செயல்பட வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் பேசினர். இந்த நிகழ்ச்​சி​யில் எம்​ஓபி வைஷ்ணவ் கல்​லூரி முதல்​வர் அர்ச்​சனா பிர​சாத், உளவியல் துறை தலை​வர் காயத்ரி

ஸ்வே​தா, சென்னை பல்​கலைக்​கழக உளவியல் துறை தலை​வர் சசிகலா, மருத்​து​வர்​கள், கல்​லூரி மாணவர்​கள் பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *