விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் மோனிகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் 2021ம் ஆண்டு அறிமுகமாகிக்கொண்டனர். அடிக்கடி விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளுக்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்தனர். ரவீந்திரா கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். ரவீந்திராவிற்கு கடந்த 2024ம் ஆண்டு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து மோனிகாவுடனான தொடர்பை ரவீந்திரா தொடர்ந்தார். விடுமுறையில் வரும்போது மோனிகாவுடன் தியேட்டர், பார்க் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தார்.
இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்தது. ரவீந்திராவின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோனிகாவை தனது வீட்டிற்கு அழைத்தார். வீட்டில் இருந்தபோது மோனிகாவிற்கும் ரவீந்திராவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவீந்திரா தன்னுடைய காதலியை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.
ஆன்லைன் கத்தி ஆர்டர்
அதன் பிறகு ஆன்லைனில் ரவீந்திரா கத்தி ஒன்றை ஆர்டர் செய்து வாங்கினார். அக்கத்தியைப் பயன்படுத்தி மோனிகாவின் உடலை பல துண்டுகளாக வெட்டினார். தலை, கை, கால் பகுதிகளை தனித்தனியாக வெட்டி எடுத்தார். உடல் பகுதியை மட்டும் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்து அடைத்தார்.