மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்; இருந்தும் வளைகுடா நாடுகளில் தாக்குதல் ஏன் தொடர்கிறது? | Iran President Apologizes, But Why Are Attacks Still Happening?

Spread the love

ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது.

ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை.

நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்… இனி அந்த நாடுகள் எங்களை தாக்கினாலே தவிர, நாங்களாக அவர்களைத் தாக்கமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

இருந்தும், இப்போது வரை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி கொண்டே தான் இருக்கிறது.

அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian

அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian

ஈரானைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவது மட்டுமே ஈரானின் அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பணி.

மற்றப்படி, அனைத்து அதிகாரங்களும் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடமே (IRGC) இருக்கும்.

இப்போது தங்கள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *