முக்கியமான பரிசோதனைகள்:
20 வயதைக் கடந்த (இப்போது 15 வயதிலிருந்தே பரிந்துரைக்கப்படுகிறது) அனைவரும் கீழ்க்கண்ட 5 பரிசோதனைகளை அவசியம் செய்துகொள்ள வேண்டும்:
-
ECI (ஈசிஜி)
-
எக்ஸ்-ரே (X-Ray)
-
ரத்த சர்க்கரை (Blood Sugar)
-
ரத்தக் கொலஸ்ட்ரால் (Blood Cholesterol)
-
ரத்த அழுத்தம் (Blood Pressure)
இவை ‘சைலன்ட் கில்லர்ஸ்’ எனப்படும் அறிகுறியில்லா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.
81 வயதிலும் ஒரு மாத்திரை கூட உட்கொள்ளாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனது 60 ஆண்டுகால அனுபவத்தில் மூன்று முக்கிய வழிமுறைகளை எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்.

உணர்வு: எதையும் மாற்ற முடியாது என்றால் அதை மனதார ஏற்றுக்கொள். எக்ஸ்ட்ரீம் ஹாப்பினஸ் அல்லது எக்ஸ்ட்ரீம் ஸ்ட்ரெஸ் இரண்டுமே ஆபத்தானது.
உணவு: பசிக்காக உண்ணாமல், உடலின் தேவை அறிந்து சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி: தினமும் மிதமான மற்றும் முறையான உடற்பயிற்சி அவசியம்.
பிரச்னையற்ற மனிதன் உலகில் இல்லை. பிரச்னையைச் சுமக்காமல், இறைவனிடமோ அல்லது இயற்கையிடமோ ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருக்கப் பழகுங்கள். “கவலைப்படாதே… கவலைப்படுவது தீர்வாகாது” என்பதே இதய ஆரோக்கியத்தின் தாரக மந்திரம்.” என்றார்.