'மரியாதை, அங்கீகாரம் இல்லை' – நாதக முக்கிய நிர்வாகி விலகல்! பரபரப்பு அறிக்கை!!

Dinamani2fimport2f20192f122f302foriginal2funnamed.jpg
Spread the love

நாம் தமிழர் கட்சியில் மரியாதை, அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் அதனால் மன வருத்தத்தில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாகவும் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அபூ. சுகுமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுகிறேன்

நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன்

2015-ல் முதன்முதலாக செஞ்சி நகர செயலாளராக நியமிக்கப்பட்டு 2018-ல் தொகுதி செயலாளர் ஆகவும் 2020-ல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021-ல் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தோம்.

இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், இரண்டு சட்டமன்றத் தேர்தல், ஒரு உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தலிலும் நாம் சிறப்பாக வேலை செய்தோம்.

அதேபோல உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் 100% வேட்பாளரை நிரப்பினோம். கட்சியின் கிளை பொறுப்புகளை முடிந்த அளவு இதுவரை நிரப்பி தலைவர் சீமானிடம் கையொப்பமும் வாங்கினோம். மாவட்டத்தின் சிறந்த தொகுதியாக செயல்பட்டு வந்தோம்.

இதுநாள் வரை நாம் செய்த செயல்கள், உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் அவர் பொருட்படுத்தும்படி இல்லை. இது அனைத்து பொறுப்பாளருக்கும் சமம்.

கட்சியின் தலைவர் சீமான் கூறியது: இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக் கூடாது, என் இஷ்டப்படிதான் நான் செய்வேன், நீங்கள் இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள், உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை, செலவு செய்யவும் கூறவில்லை என்று கூறினார்.

ஒன்றுக்கு இருமுறை பேசியும் நான் செய்வதுதான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறியதன் அடிப்படையில்,

நாங்கள் உங்களிடம் கேட்டது பணமோ, பொருளோ அல்ல, எங்களுக்கான மரியாதை மற்றும் எங்களுக்கான அங்கீகாரம், இதுவே உங்களால் தர முடியவில்லை,

எனவே, மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்… நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன்.

இதுநாள் வரை என்னுடன் பணியாற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபமாக முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி வருகின்றனர். நேற்று முன்தினம்(அக். 1) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிர்வாகிகள் கூட்டாக விலகுவதாக அறிவித்ததுடன் கட்சியின் மீதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்த சூழ்நிலையில் கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகியுள்ளது கட்சியினரிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *