மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழகம்தான் வழிகாட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் | Ma Subramanian is proud for tn is guide for India in medical field

1376232
Spread the love

சென்னை: மருத்​து​வத் துறை​யில் இந்​தி​யா​வுக்கு தமிழகம்​தான் வழி​காட்டி என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் காப்​பீடு திட்​டத்​தின் மூலம், 50-க்​கும் மேற்​பட்ட கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்​சைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

அந்த வகை​யில், இதன் வெற்​றியைக் கொண்​டாடும் நிகழ்ச்சி அப்​போலோ மருத்​து​வ​மனை சார்​பில், சென்னை கிண்​டி​யில் நேற்றுநடந்​தது. இதில், சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கலந்​து​கொண்டு அப்​போலோ மருத்​து​வர்​களைப் பாராட்​டி​னார்.

நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் அப்​போலோ போன்ற தனி​யார் மருத்​து​வ​மனை​களில் அரசின் மருத்​துவ சேவை​கள் ஏழை, எளிய மக்​களுக்கு முதல்​வர் காப்​பீடு திட்​டத்​தின் மூலம் தொடர்ந்து கிடைத்து வரு​கிறது. 2009-ம் ஆண்டு முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீடு திட்​டம் தமிழகத்​தில் தொடங்​கப்​பட்​டது.

இந்த திட்​டம் தொடங்​கப்​பட்டு 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு, மத்​திய அரசின் மருத்​து​வத் துறை அலு​வலர்​கள், இந்​திய அளவில் இத்​திட்​டத்தை செயல்படுத்த பிரதமர் விரும்​பு​கிறார் எனக் கூறினர். அதைத் ​தொடர்ந்​து, 2018-ம் ஆண்டு முதல் இந்​தியா முழு​வதும் பிரதமர் காப்​பீடு திட்​டத்தை மத்​திய அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

இதே​போல், தமிழகத்​தில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் ‘மக்​களைத் தேடி மருத்​து​வம்’ திட்​டம் குறித்து டெல்​லி​யில் மருத்​து​வத்துறை சார்​பில் நடந்த கூட்​டம் ஒன்​றில், மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் கேட்​டுக் கொண்​டதற்​ கிணங்க அனைத்து மாநில அமைச்​சர்​களுக்​கும் விளக்​கினேன். அப்​போது, இத்​திட்​டத்​தை​யும் இந்​தியா முழு​வதும் செயல்​படுத்த இருப்​ப​தாக மத்​திய அமைச்​சர் தெரி​வித்​தார்.

இதே​போல், சமீபத்​தில் தமிழகம் வந்த மத்​திய சுகா​தா​ரத் துறை அலு​வலர்​கள், தமிழகத்​தில் செயல்​படுத்​தப்​பட்டு வரும் ‘இன்​னு​யிர் காப்​போம் நம்மை காக்​கும் 48’ திட்​டம் செயல்​பாடு குறித்து விளக்​கங்​களைக் கேட்​டனர். அந்த வகை​யில், இந்த திட்​டத்​தைப் பின்​பற்றி மத்​திய அரசும் ஒரு திட்​டத்தை அறி​வித்​திருக்​கிறது. மருத்​துவ துறை​யில் தமிழகம்​தான் இந்​தி​யா​வுக்கே வழி​காட்​டி​யாக இருந்து வரு​கிறது.

தமிழகத்​தில் 1.47 கோடி குடும்​பங்​கள் காப்​பீடு திட்​டத்​தின் மூலம் பயன்​பெற்று வரு​கின்​றன. 1,450 சிகிச்​சைகளுக்கு மட்​டுமே இத்​திட்​டத்​தில் காப்​பீடு தொகை வழங்​கப்​பட்டு கொண்​டிருந்த நிலை​யில், தற்​போது 2,053 சிகிச்​சைகளாக உயர்த்​தப்​பட்​டுள்​ளன.

இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், சுகா​தா​ரத்​துறை செயலர் பி.செந்​தில்​கு​மார், மாற்று அறுவை சிகிச்சை ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் என்​.கோ​பால​கிருஷ்ணன், அப்​போலோ மருத்​து​வ​மனை இயக்​குநர் சிந்​தூரி ரெட்​டி, மருத்​து​வமனை​யின் கல்​லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறை தலை​வர் இளங்​குமரன், அப்​போலோ சென்னை மண்டல தலைமை நிர்​வாக அதி​காரி இளங்​குமரன்​ கலியமூர்​த்​தி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *