அவர் எங்கு வாழ்கிறார், யாருடன் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். எனது தற்போதைய வாழ்க்கைச் சூழலில் என்னிடம் பெரும் தொகை உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முரணானது ஆகும். அவர் சொத்தைக் குறிப்பிட்டு என் பெயரை அதிலிருந்து அழிக்கச் சொன்னார். நான் ரூ.5 கோடியை திருடிவிட்டேன் என்று சொல்கிறார். என் வங்கிக் கணக்கைப் பாருங்கள். அதில் என்ன இருக்கிறது என்று தெரியும். திருமணமாகி 18 வருடங்கள், நாங்கள் ஒன்றாக இருந்தோம். நான் அவருடன் 18 வருடங்கள் வாழ்ந்தேன். எனக்கு என்ன இருக்கிறது? என் வீட்டைப் பாருங்கள்.
நான் டெல்லியில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறேன். அவர் ஒரு பிரபலம். அவர் என்ன சொன்னாலும் சிலர் கேட்பார்கள், சிலர் கேட்க மாட்டார்கள். நான் எனது திருமண மோதிரத்தைக் கழற்றிவிட்டேன். கடன் வாங்கி சொத்தை அபகரித்தேன் என்று சொல்கிறார். சொத்து என் பெயரில் இருந்தால், அவரிடம் ஆவணங்கள் இருக்கும், இல்லையா? அந்த ஆவணங்களை அவர் கொண்டு வரட்டும், பிறகு பேசுவோம். நாங்கள் வழக்கமாக விவாகரத்து பெற்றுள்ளோம்.
இன்னும் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. நான் என் குழந்தைகளை நேசிப்பதால் நீதிமன்றத்தில் போராட விரும்பவில்லை, என் கணவர் பணம் திருடுகிறார் என்று தேசிய ஊடகங்களில் பேசி என்ன பயன்? அவரது விளையாட்டு வாழ்க்கையிலும், தனிப்பட்ட முறையிலும் நான் அவருக்கு பல விதங்களில் உதவி செய்து இருக்கிறேன். ஆனால் அவர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை மறப்பேன்.
ஆனால் அவர் எனக்கு செய்ததை மன்னிக்க மாட்டேன். என்னை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டார். நான் மது அருந்துகிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் வோட்கா, ரம் குடிப்பார், குட்கா சாப்பிடுவார். ஆனால் அதை வெளியில் சொன்னது கிடையாது. 2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் காயம் அடைந்தார். அப்படி இருந்தும் மும்பை சென்று அவர் தொடர்பு வைத்திருக்கும் நபரைச் சந்தித்துவிட்டு வந்தார். அதற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.