மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் மந்த கதியில் நடைபெறும் நடைமேம்பால பணிகள்! | Flyover construction works issue in Kattankulathur, Maraimalai Nagar GST Road

1353180.jpg
Spread the love

​தாம்​பரத்தை அடுத்த காட்​டாங் ​குளத்​தூர் மற்றும் மறைமலை நகர் ஜிஎஸ்டி நெடுஞ்​சாலை​யில் நடை மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறு​வ​தால் பொது​மக்கள் சாலையை கடந்​து செல்ல மிகவும் சிரமப்படு​கிறார்​கள்.

ஜிஎஸ்டி நெடுஞ்​சாலை​யில் ஒரு புறத்​தில் இருந்து மற்றொரு புறத்​துக்கு பாதசா​ரிகள் கடந்​து செல்ல வசதியாக மறைமலைநகர் ரயில்வே நிலையம் அருகே​யும் அதைத்​தொடர்ந்து, அண்மை​யில் பொத்​தேரி ரயில் நிலையம் அருகே​யும் நடை மேம்​பாலங்கள் அமைக்​கப்​பட்டு பொது​மக்கள் பயன்​படுத்தி வருகின்​றனர்.

இதன் தொடர்ச்​சியாக மறைமலை நகர் பேருந்து நிறுத்​தத்​தி​லும், அதே போல், காட்​டாங்​குளத்​தூர் பேருந்து நிறுத்​தத்​தி​லும் பொது​மக்கள் ஜிஎஸ்டி சாலையை எளிதில் கடந்​துசெல்ல வசதியாக இந்திய தேசிய சாலைகள் ஆணையம் அங்கு நடை மேம்​பாலங்கள் கட்ட முடிவு செய்​தது. அதற்கான பணிகளும் 6 மாதங்​களுக்கு முன்பு தொடங்​கப்​பட்டன.

காட்​டாங்​குளத்​தூர் நடைமேம்பால பணியில் கான்கிரிட் தளம் அமைக்​கப்​பட்டு பாதி அளவுக்கு இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மறைமலைநகர் நடை மேம்​பாலத்​தில் கான்கிரிட் தள பணி மட்டுமே முடிந்​துள்ளது. அடுத்த கட்ட பணியான இரும்பு பாலங்கள் இன்னும் நிறு​வப்​பட​வில்லை. இரு இடங்​களி​லும் நடை மேம்​பாலம் அமைக்​கும் பணிகள் மெதுவாக நடைபெறு​வதாக அப்பகுதி பொது​மக்கள் புகார் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் பகுதி பொது​மக்கள் மற்றும் வியாபாரிகள் கூறும்​போது, “நடைமேம்​பாலத்​துக்கான பள்ளங்கள் தோண்டி அப்படியே போட்டு​விட்​டார்​கள். இப்போது​தான் கான்கிரிட் தளம் அமைத்​துள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்​களில் பள்ளி, கல்லூரி மாணவர்​கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்​கள், வியாபாரிகள் என ஏராள​மானோர் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வேண்​டி​யுள்​ளது. தாம்​பரம் மார்க்​கமாக செல்​வதாக இருந்​தால் ஜிஎஸ்டி சாலையை கடந்து மறுபுறம் போக வேண்​டும்.

அதேபோல், செங்​கல்​பட்டு மார்க்​கமாக பேருந்​துகளில் வந்து இறங்​கு​வோர் மறைமலை நகருக்​குள் வர வேண்​டு​மானாலும் ஜிஎஸ்டி சாலையை கடந்தாக வேண்​டும். காலை​யில் பேருந்தை பிடிக்க வேண்​டும் என்ப​தற்காக அவசர அவசரமாக ஜிஎஸ்டி சாலையை கடப்​பவர்கள் நிறைய பேர்.

இதனால், இப்பகு​தி​யில் அடிக்கடி காலை​யிலும் மாலை​யிலும் விபத்துகள் நேரிடு​கின்றன. நடை மேம்பால பணியை விரைந்து முடித்​தால் பாது​காப்பான முறை​யில் ஜிஎஸ்டி சாலையை கடப்​ப​தற்கு மிகவும் வசதியாக இருக்​கும். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

இதே கோரிக்கையை காட்​டாங்​குளத்​தூர் பகுதி பொது​மக்​களும் முன்​வைத்​தனர். அவர்கள் மேலும் கூறும்​போது, நடை மேம்​பாலம் அமைப்​ப​தற்கான ஆரம்ப கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றன. ஆனால், தற்போது இரு புறமும் கான்கிரிட் தளத்​துக்கு மேல் இரும்பு பாளங்கள் நிறு​வும்பணி பாதி​யில் நிற்​கிறது.

பொது​மக்​களின் நலனை கருத்​தில்​கொண்டு இப்​பணிகளை ​விரைந்து ​முடிக்க வேண்​டும். வய​தானவர்​கள் மற்றும் குழந்தைகளின் வச​திக்காக நடைமேம்​பாலத்​தின் இரு​புற​மும் லிப்ட் வசதி அமைத்து ​கொடுக்க வேண்​டும் என்று வேண்​டுகோள்​ ​விடுத்தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *