மற்றவர்களை கவனிப்பது என்வேலை இல்லை-இளையராஜா

Ilayaraja
Spread the love

இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இவர், தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்களுக்கு காப்புரிமை தொடர்பாக இளையராஜா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இளையராஜா வீடியோ பதிவு

இந்த நிலையில் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
என்னைப் பற்றி தினமும் எதோ ஒரு வகையில் இது போன்ற வீடியோக்கள் நிறைய வருவதை கேள்வி படுறேன். அதில் நான் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் மத்தவங்களை கவனிப்பது என்னுடைய வேலையில்லை.

என்னுடைய வேலையைக் கவனிப்பது தான் என்னுடைய வேலை. என்னுடைய வழியில் ரொம்ப தெளிவா சுத்தமா போய்ட்டு இருக்கேன். நீங்க என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிற நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன்.

சிம்பொனி

படங்களுக்கும் இசையமைத்துக் கொண்டு, சில விழாக்களுக்கும் சென்று தலையை காட்டிவிட்டு வருகிறேன். இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும் 35 நாட்களில் முழுவதுமாக சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன்.

இந்தச் சந்தோஷமான செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். பிலிம் மியூசிக் என்பது வேறு, பிண்ணனி இசை என்பது வேறு, இது அனைத்தும் எதிரொலித்தால் அது சிம்பொனி கிடையாது. அதனால் அதை எதுவும் கலக்காத சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *