மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன? | cm stalin independence day speech

1373191
Spread the love

சென்னை: கட்​ட​ணமில்லா விடியல் பேருந்து பயணத்​திட்​டம், மலைப் பகு​தி​களில் உள்ள மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் விரிவுபடுத்​தப்​படும் என்​பது உட்பட 9 அறி​விப்​பு​களை சுதந்​திர தின உரை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டார்.

நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்​தையொட்​டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் தேசி​யக் கொடியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஏற்​றி​வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: நாட்​டுக்​காக உழைத்த தியாகி​களைப் போற்​றும் அரசே திமுக அரசு. சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் நினை​விடங்​களில் ஒலி-ஒளி காட்​சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. காந்தி மண்​டபம், அருங்​காட்​சி​யகம், பெருந்​தலை​வர் காம​ராஜர் மண்​டபம், பெரிய​வர் பக்​தவத்​சலம் மண்​டபம் ஆகிய​வற்றை மேம்​படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. முன்​னாள் படைவீரர்​கள் மற்​றும் அவர்​களைச் சார்ந்​தோர்​களுக்​காக ‘காக்​கும் கரங்​கள்’ திட்​டத்தை வரும் 19-ம் தேதி தொடங்கி வைக்க உள்​ளேன்.

14 ஆண்​டு​களுக்​குப் பிறகு, திமுக ஆட்​சி​யில் தமிழகத்​தின் பொருளா​தார வளர்ச்​சி, 11.19 சதவீத​மாக அதி​கரித்​து, பெரிய உச்​சத்தை தொட்​டுள்​ளது. இந்த ஆண்டு தொடக்​கத்​தில், தமிழக நிதி​நிலை அறிக்​கை​யைத் தாக்​கல் செய்​த​போது, கூறி​யிருந்த, 9.69 சதவீத்தை விட இது சுமார் 1.5 சதவீதம் அதி​கம். இந்​தி​யா​விலேயே மிக விரை​வாக வளரும் பொருளா​தா​ர​மாக தமிழகம் திகழ்​கிறது.

சுதந்​திர தினத்​தில் 9 அறி​விப்​பு​களை வெளி​யிடு​வ​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். விடு​தலைப் போராட்ட வீரர்​களுக்கு தற்​போது வழங்​கும் மாதாந்​திர ஓய்​வூ​தி​யம் ரூ.22,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். விடு​தலைப் போராட்ட தியாகி​களின் குடும்​பங்​களுக்கு தற்​போது வழங்​கும் மாதாந்​திர குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.12,000 ஆக உயர்த்​தப்​படும். வீர​பாண்​டிய கட்​டபொம்​மன், முன்​னாள் ராம​நாத​புரம் மன்​னர் முத்​து​ராமலிங்க விஜய ரகு​நாத சேதுப​தி, சிவகங்கை மருது சகோ​தரர்​கள் மற்​றும் வ.உ.சிதம்​பர​னார் ஆகியோரின் வழித்​தோன்​றல்​கள் பெறும் மாதாந்​திர சிறப்பு ஓய்​வூ​தி​யம் ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும்.

இரண்​டாம் உலகப்​போரில் பங்​கேற்ற தமிழகத்​தைச் சேர்ந்த முன்​னாள் படை வீரர்​களுக்கு வழங்​கப்​படும் ஆயுட்​கால மாதாந்​திர நிதி​யுதவி ரூ.14,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். இரண்​டாம் உலகப்​போரில் பங்​கேற்ற வீரர்​களின் கைம்​பெண்​களுக்கு வழங்​கப்​படும் ஆயுட்​கால மாதாந்​திர நிதி​யுதவி ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும்.

தமிழகத்​தைச் சேர்ந்த முன்​னாள் படைவீரர்​கள் வசதிக்​காக, சென்னை மாதவரத்​தில் 33,000 சதுரஅடி பரப்​பள​வில் உட்​கட்​ட மைப்​புடன் கூடிய முன்​னாள் படை வீரர்​கள் தங்​கும் விடுதி ரூ.22 கோடி​யில் கட்​டப்​படும். தமிழகத்​தின் மலைப்​பகு​தி​களில் செயல்​படுத்​தப்​படும் கட்​ட​ணமில்லா விடியல் பேருந்து பயணத்​திட்​டம் மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் விரிவுபடுத்​தப்​படும். ஓட்​டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் 2 பயிற்சி மையங்​கள் மற்​றும் மாவட்​டத்​துக்கு ஒரு ஓட்​டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்​கப்​படும்.

தமிழக கட்​டு​மானத் தொழிலா​ளர்​கள் நல வாரி​யத்​தில் பதிவு பெற்ற தொழிலா​ளர்​களின் குழந்​தைகள் கல்​லூரி​யில் படிக்​கும்​போது, திறனை மேம்​படுத்தி வேலை​வாய்ப்பு பெற நவீன தொழில்​நுட்​பங்​களில் 10 ஆயிரம் மாணவர்​களுக்கு ரூ.15 கோடி செல​வில் இணை​ய​வழி​யில் திறன் மேம்​பாட்டு பயிற்சி வழங்​கப்​படும். இந்த 9 அறி​விப்​பு​கள் விரை​வில் செயல்​படுத்​தப்​படும்.

பல மாநிலங்​கள், மொழிகள், பண்​பாடு​கள், மதங்​களைச் சார்ந்த கோடிக்​கணக்​கான மக்​கள், அனைத்து வேற்​றுமை​களை​யும் கடந்​து, அனை​வரும் இந்​தி​ய​ராக ஒருங்​கிணைந்து செயல்பட நமது அரசி​யல் அமைப்பு சட்​டமே காரணம். இதில் மத்​திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மக்​கள் பணி​யாற்​றத் தேவை​யான அதி​காரப்​ பகிர்வு தெளி​வாக வரையறுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆனால், அதி​காரப் பகிர்​வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வரு​வது வருத்​தமளிக்​கிறது. மேலும், கடந்த சில ஆண்​டு​களாக, பல்​வேறு துறை​களில் மாநில அரசுகளின் உரிமை​களைப் பறிக்​கும் பல முயற்​சிகளை மத்​திய அரசு மேற்​கொண்டு வரு​கிறது. கல்​வி, மருத்​து​வம் போன்ற முக்​கிய துறை​களில் மாநில அரசுகளின் உரிமை​கள் தொடர்ந்து பறிக்​கப்​படு​கின்​றன.

மத்​திய – மாநில அரசுகளுக்​கிடையே​யான அதி​காரம் மற்​றும் நிதிப் பகிர்​வில் மாநில அரசுகளின் பங்கை மீட்​டெடுத்​திட, அரசி​யல் சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்​கைகள் எடுப்​பதே ஒரே தீர்​வு. இதற்​கான முன்​முயற்​சிகளை நிறைவேற்​றி முடிப்​ப​தற்​கான தருணம்​ தற்​போது வந்​து​விட்​டது. இவ்​வாறு ​முதல்​வர்​ பேசி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *