
அப்போது அவர்கள் மலையின் செங்குத்தான பகுதியில் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் பாலமுருகன் அங்கிருந்து தப்பிச் சென்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த வாரம் பதுங்கியிருந்தார். அங்கும் அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஜோஸ்ஃபினா மகள்கள் இருவருடன் விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜோஸ்ஃபினா உயிரிழந்தார். மகள்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இறந்த ஜோஸ்ஃபினாவின் உடலையும் இதுவரை அவரது உறவினர்கள் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாலமுருகன் மற்றும் அவரது தம்பி மகேஷ் ஆகியோர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.