மாநிலங்களவை எம்​.பி.​யாக இன்று முதல் கடமையை செய்யப் போகிறேன்: கமல்ஹாசன் பெருமிதம் | Kamal Haasan says proud for performing my duties as a Rajya Sabha MP from today

1370685
Spread the love

சென்னை: மாநிலங்​களவை எம்​.பி.​யாக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்​யப்​போகிறேன்’ என்று மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பெரு​மிதத்​துடன் கூறி​னார். திமுக கூட்​ட​ணி​யின் ஆதர​வுடன் மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வர் கமல்​ஹாசன், மாநிலங்​களவை எம்​.பி.​யாக அண்​மை​யில் போட்​டி​யின்றி தேர்​வுசெய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், மாநிலங்​களவை​யில் உறுப்​பின​ராக இன்று அவர் பதவி​யேற்​கிறார். இதற்​காக நேற்று காலை சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​பட்​டுச் சென்​றார். முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கமல்​ஹாசன் கூறிய​தாவது: செய்​தி​யாளர்​கள் செய்தி சேகரிக்க மட்​டும் வராமல், என்னை வாழ்த்தி அனுப்​புவதற்​கும் வந்​திருப்​ப​தாக நினைக்​கிறேன்.

அதற்​காக உங்​களுக்கு நன்​றி. மக்​களின் வாழ்த்​துகளு​டன், நான் அங்கு உறு​தி​மொழி எடுத்​து, எனது பெயரைப் பதிவு செய்ய டெல்லி செல்​கிறேன். இந்​தி​ய​னாக எனக்கு கொடுக்​கப் ​பட்​டிருக்​கும் மரி​யாதையை​யும், கடமை​யை​யும் நான் செய்​யப்​போகிறேன். இதை பெரு​மை​யுடன் நான் சொல்​லிக் கொள்​கிறேன்.

எனது கன்​னிப் பேச்​சு, எதை மையப்​படுத்தி இருக்​கும் என்​ப​தை, இப்​போது இங்கு சொல்​லக் கூடாது. சில விஷ​யங்​கள் இங்கு பேசுவது​போல் அங்கு பேசக்​கூ​டாது. அதே​போல், அங்கு பேசுவது​போல், இங்கு பேசக்​கூ​டாது. எனது 6 ஆண்​டு​கால பயணத்​தைக் கவனித்​தால், நான் எதை நோக்​கிச் செல்​கிறேன் என்​பது புலப்​படும். இவ்​வாறு கமல்​ஹாசன் கூறி​னார்.

இதற்​கிடையே, டெல்லி நாடாளு​மன்​றத்​தில் கமல்​ஹாசன் இன்று எம்​.பி.​யாக பதவி​யேற்​கும் நிகழ்வை தொண்​டர்​களும், பொது​மக்களும் பெரிய திரை​யில் நேரலை​யில் காண்​ப​தற்கு சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *