சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். கோழிக்கடையில் வேலை செய்கிறார். இவரது நண்பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்தில் பணிபுரிகிறார். கடந்த 5-ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில், கிருஷ்ணராஜபுரம் பகுதியில் சென்றபோது, அவர்கள் மீது அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆகாஷ் டெல்சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இதில், இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது நால்வரும் கலைந்து சென்றனர். பின்னர், கிருஷ்ணராஜபுரம் மயானம் அருகே ஜெயக்குமார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஆகாஷ் டெலிசன், குணா ஆகியோர் இருவரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெயக்குமார், அழகர்சாமி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெலிசன் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் மாற்றப்பட்டார்.