ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஜானகி.
20 ஆண்டுகளுக்கு முந்தைய படமென்றாலும், படம் சொல்ல வருகிற செய்தி இந்தக் காலத்திற்கும் பொருந்திப்போவது படத்தின் பலம். நண்பர்களாக வரும் எஸ். ஹரிகிருஷ்ணா, ராஜேஷ் பாலா, அருண் குமார் ஆகிய மூவரில் ஹரி மட்டுமே ஸ்கோர் செய்கிறார்.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், துணைக் கதாபாத்திரங்கள் எனத் தெரிந்த முகமே இல்லாமல் முழுக்க முழுக்க புதுமுகங்களை மட்டுமே வைத்து சொல்ல வந்த விஷயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் KJ சுரேந்தர்.

இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் `எனக்குள்ளே’ பாடல் கவனிக்க வைத்ததோடு, முக்கியமான காட்சிகளில் பின்னணி இசையிலும் அழுத்தம் கூட்டியிருக்கிறார்.
கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சாக்கி. முதல் பாதியில் காட்சிகளை இன்னும் கொஞ்சம் தன் கத்திரியால் வினோத் சிவகுமார் மெருகேற்றியிருக்கலாம்.