மார்க்கெட் பார்த்து பயமா? ஏன் தைரியமானவர்களுக்கு மட்டுமே பங்குச்சந்தை லாபம் தரும்?

Spread the love

மார்ச் 2026… நியூஸ் சேனலைத் திறந்தாலே ஒரே ரத்தக் களறிதான். ஒரு பக்கம் “அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்”, இன்னொரு பக்கம் “கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100-ஐத் தாண்டிவிட்டது”, உலக மார்க்கெட் எல்லாம் சரியுதுன்னு தலைப்புச் செய்திகள் பயமுறுத்துகின்றன.

இதன் விளைவாக நம்ம ஊர் மார்க்கெட்டும் சும்மா இருக்குமா? மார்ச் முதல் வாரத்தில் சென்செக்ஸ் ஒரே நாளில் 2,400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் ஆட்டம் காண வைத்தது. நிஃப்டியும் 700 புள்ளிகள் வரை சரிந்தது. நம்ம ஆட்கள் பல பேருக்குப் பதற்றத்துல வியர்த்து ஊத்துது. “ஐயோ, போட்ட காசு எல்லாம் போச்சே! மார்க்கெட் இன்னும் கீழ போயிடுமோ? இப்பவே எல்லாத்தையும் வித்துட்டு வெளில வந்துடலாமா?” என்று பயத்தில் உறைந்திருக்கிறார்கள்.

கொஞ்சம் பொறுங்க பாஸ்! மார்க்கெட் இப்படிச் சரிவது முதல் முறையா என்ன?

பழைய கதையை கொஞ்சம் திருப்பிப் பார்ப்போம்.

2008-ல் உலகப் பொருளாதார வீழ்ச்சி (Global Financial Crisis) வந்தபோது, நிஃப்டி பாதிக்குப் பாதி சரிந்தது. “அவ்வளவுதான் மார்க்கெட் காலி” என்றார்கள். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே அது டபுள் மடங்கு லாபம் தந்தது.

2020-ல் கொரோனா வந்தபோது, நிஃப்டி 7,500 புள்ளிகளுக்குச் சரிந்தது. உலகமே முடங்கிப்போன அந்த நேரத்தில் மார்க்கெட் அவ்வளவுதான் என்று பலரும் விற்றுவிட்டு ஓடினார்கள். ஆனால், அதன் பிறகு மார்க்கெட் 25,000 புள்ளிகளைத் தொட்டு ஒரு சரித்திர சாதனை படைத்தது!

இப்போது 2026-ல் நடக்கும் இந்தச் சரிவும் அதுபோல ஒரு தற்காலிகமான விஷயம்தான். 5 வருடங்களுக்கும் மேல் முதலீட்டைத் தொடர இருப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பே.

மாபெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி & எழுச்சி

மாபெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி & எழுச்சி

ஏன் இந்தச் சரிவில் நீங்கள் விற்கக் கூடாது?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எஃப்.ஐ.ஐ (FII) எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்தான் பயந்துபோய் பணத்தை வெளியே எடுக்கிறார்கள். ஆனால், நம்ம ஊர் டி.ஐ.ஐ (DII) எனப்படும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் (அதாவது உங்களைப் போல மியூச்சுவல் ஃபண்டில் மாதம் மாதம் SIP செய்யும் சாமானியர்கள்) இந்த மார்க்கெட் வீழ்ச்சியைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடி ரூபாய்க்குப் பங்குகளை வாங்கிச் சேர்க்கிறார்கள்.

மார்க்கெட் சரியும்போது விற்றுவிட்டு ஓடுபவர்கள் எப்போதுமே நஷ்டத்தில்தான் இருப்பார்கள். ஆனால், சரிவை ஒரு “டிஸ்கவுண்ட் சேல்’ போலப் பார்த்து, தைரியமாக முதலீட்டைத் தொடருபவர்களுக்கே மார்க்கெட் ராஜ மரியாதையுடன் லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.

மார்க்கெட் எப்போதுமே தைரியமானவர்களைத்தான் கொண்டாடும்!

மார்க்கெட் கீழே போகும்போதுதான் நல்ல நல்ல நிறுவனப் பங்குகள் (Blue-chip stocks) குறைவான விலையில் கிடைக்கும். “Buy on dips” என்பதுதான் புத்திசாலியான முதலீட்டாளர்களின் தாரக மந்திரம். நீங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பயப்படாமல் அமைதியாக இருங்கள். உங்கள் SIP முதலீட்டை எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்திவிடாதீர்கள். உங்களிடம் கொஞ்சம் கூடுதல் பணம் இருந்தால், மார்க்கெட் சரிந்திருக்கும் இந்த நேரத்தில் அதை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்.

போர் பதற்றங்கள் தணிந்து, கச்சா எண்ணெய் விலை குறையும்போது மார்க்கெட் மீண்டும் ராக்கெட் வேகத்தில் மேலெழும்பும். அப்போது, இப்போது பயந்து ஓடியவர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

சரி, நீங்கள் இந்தச் சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்வது எப்படி?

உழைத்தது போதும்… 60 வயது வரை எந்திரம் போல ஓடிக் கொண்டிருக்காமல், 45 அல்லது 50 வயதிலேயே எப்படி நிம்மதியாக ‘ரிட்டையர்’ ஆவது? முன்கூட்டியே வேலையை விட்டாலும், வாழ்நாள் முழுவதற்கும் பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க எந்தெந்த முதலீட்டு உத்திகள் (FIRE Strategy & Passive Income) கைகொடுக்கும்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்து, உங்கள் நிதிச் சுதந்திரத்தை முன்கூட்டியே திட்டமிட ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ!

labham workshop march 22, 2026

labham workshop march 22, 2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *