மாவநல்லா அருகே அமைத்த கூண்டில் அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி சிக்கியது – வனத்துறை உறுதி | Male Tiger Trapped in Cage Near Mavanalla, Confirms Forest Department

Spread the love

பழங்குடி பெண்ணை தாக்கிய குறிப்பிட்ட அந்த புலியை அதன் உடல் வரிகளைக் கொண்டு அடையாளம் காணும் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 3-ஆம் தேதி எதிர்பாராத விதமாக கூண்டுக்குள் சிறுத்தை ஒன்று சிக்கியது. அதே பகுதியில் அந்தச் சிறுத்தையை உடனடியாக விடுவித்துள்ளனர். தொடர்ந்து புலியைக் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

மாவநல்லா பகுதியில் அமைத்திருந்த கூண்டுக்குள் இன்று அதிகாலை வயது முதிர்ந்த ஆண் புலி ஒன்று சிக்கியிருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

கூண்டுக்குள் சிக்கிய புலி

கூண்டுக்குள் சிக்கிய புலி

வேட்டைத்திறன் இழப்பால் கால்நடைகளையும்‌ பழங்குடி பெண்ணையும் இந்த புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கும் வனத்துறை, அந்த புலியை அடையாளம் காண்பதுடன் அதன் உடல்நிலை, வயது போன்றவை குறித்தும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் வேட்டையாடும் உடல் திறனை அந்த புலி இழந்திருப்பதை உறுதி செய்தால் மைசூரில் உள்ள புலிகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *