
தகவல் அறிந்த மண்டபம் போலீஸார், உயிரிழந்த மகன், தந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் உயிரிழந்த துக்கத்தினை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவம் குறித்து மண்டபம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.