மின்வாரியம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தளவாடப் பொருட்களை இருப்பு வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் | Monsoon precautionary measures by tneb officials instruction

1376623
Spread the love

சென்னை: தமிழகத்​தில் பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கையாக மின்​சார தளவாடப் பொருட்​களை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்​டும் என்று அதிகாரிகளுக்கு அறி​வுறுத்​தப்பட்டுள்ளது.

தமிழக மின்​வாரி​யம் மற்​றும் துணை நிறு​வனங்​கள் இடையி​லான உயர்​நிலை ஒருங்​கிணைப்பு குழு கூட்​டம் சென்னை அண்ணா சாலை​யில் உள்ள மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. மின்​வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தலைமை வகித்​தார்.

கூட்​டத்​தில் அதி​காரி​களுக்கு பல்​வேறு ஆலோ​சனை​கள், அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டன. பரு​வ​மழை முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை விரைவுபடுத்த வேண்​டும். குறிப்​பாக, அனைத்து வட்​டங்​களி​லும் தேவை​யான தளவாடப் பொருட்​களை மழைக்கு முன்​பாக இருப்பு வைக்க வேண் டும். தாழ்​வான மின்​பெட்​டிகளை உயர்த்​து​வது, வெளியே தெரி​யும் புதைவட கம்​பிகளை சரிசெய்​வது உள்​ளிட்ட பணி​களை விரைந்து மேற்​கொள்ள வேண்​டும். சீரான மின் உற்​பத்​தியை உறு​தி​செய்ய போதிய அளவில் நிலக்​கரி கையிருப்​பில் வைக்க வேண்​டும். நுகர்​வோருக்கு தடை​யில்லா மின் விநி​யோகம் வழங்​கப்பட வேண்​டும். பொது​மக்​கள், பணி​யாளர்​களின் பாது​காப்பு உறுதி செய்​யப்பட வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டது.

மறுசீரமைக்​கப்​பட்ட மின் விநி​யோக திட்​டங்​கள், மத்​திய, மாநில அரசு திட்​டங்​களின் முன்​னேற்​றம், உள்​ளாட்சி அமைப்​பு​களு​டன் பராமரிப்பு பணிகளில் ஒத்​துழைப்பு உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்​து ஆலோ​சனை நடை​பெற்​றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *