மின் கட்டண கவலை இனி இல்லை… உங்கள் வீட்டில் இது இருந்தால் எப்போதும் இலவச மின்சாரம்!

Spread the love

மின்சார உபகரணங்கள் பயன்பாடு வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதும், அதனால் மின் கட்டணங்கள் உயரும் என்பதும் பல நடுத்தர மக்களிடம் கவலையை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க சரியான வழி சோலார் மின் உற்பத்தி. இனி நாம் அனைவருமே நம் வீட்டிலேயே சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளலாம்.

சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

டார்லிங் சோலார் இலவச மின்சாரம்

டார்லிங் சோலார் இலவச மின்சாரம்

ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்ற அருமையான திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதில் இதுவரை 30 லட்சத்துக்கும் மேலான குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. ஆனால், இதில் அதிகமானோர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். குஜராத்தில் 6 லட்சம் பேர் பயன் அடைந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 60 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இது குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாணயம் விகடன், டார்லிங் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

டார்லிங் சோலார் இலவச மின்சாரம்

டார்லிங் சோலார் இலவச மின்சாரம்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 18-ம் தேதி புதுச்சேரியில் நடக்க உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் சோலார் பற்றி தெளிவான அனைத்து கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க வருகிறார் டார்லிங் நிறுவனத்தின் இயக்குநர் நவராஜ முருகன். மேலும் இந்த நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு பேசுகிறார்.

நிகழ்ச்சி விவரங்கள்:

Date: ஏப்ரல் 18, 2026, Time: மாலை 6.00 – 8.00

முகவரி: Shenbaga Hotel & Convention Centre, No.432, MG Road, Muthialpet, Puducherry 605003

டார்லிங் சோலார் இலவச மின்சாரம்

டார்லிங் சோலார் இலவச மின்சாரம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *