அதேநேரத்தில் வேலுமணியின் ரகசியங்களையும் சந்திரசேகர் நன்கறிவார். அவர் மூலம் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பளித்து விட கூடாது என்பதற்காக அவரை இணைத்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே அவர் மீண்டும் ஆக்டிவாக தொடங்கியுள்ளார். விரைவில் கோவை வடக்கு தொகுதிக்கு விருப்ப மனு அளிக்கவுள்ளார்.
இருப்பினும் வேலுமணிக்கு ஒருமுறை ஒருவர் மீது தவறான பிம்பம் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க மாட்டார். அதனால் அதிமுகவில் அவரின் இரண்டாவது இன்னிங்ஸில் பழைய செல்வாக்கு, கிடைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.” என்றனர்.