அரசிடம் இப்போது எல்ஐசி-யின் 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5 சதவீத பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. பங்குச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் எல்ஐசி பங்கு வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.926.90 என்ற விலையில் உள்ளது.
மீண்டும் எல்ஐசி பங்கு விற்பனை மத்திய அரசு முடிவு
