“மீண்டும் முதல்வர் பதவியில் ஸ்டாலின் நீடிக்க வேண்டும்” – டாக்டர் பட்டம் பெற்ற சிவகுமார்|”Stalin should remain as Chief Minister again” – Sivakumar, who holds a doctorate

Spread the love

தந்தையின் வழியிலே மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதை எனக்கு வழங்கிய இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் சிறுவயதிலிருந்து அதிகமாக சினிமாக்கள் பார்த்ததில்லை. 14 வயது வரை நான் பார்த்த மொத்த படங்கள் வெறும் 14தான்.

அதில் மறக்க முடியாத படங்கள் ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘இல்லறம்’, ‘இல்லற ஜோதி’, ‘ராஜா ராணி’ போன்ற படங்கள். அந்தப் படங்களில் வரும் கலைஞர் வசனங்களை 15 வயதிலே மனப்பாடம் செய்து விட்டேன்.

டாக்டர் பட்டம் பெற்ற சிவகுமார்

டாக்டர் பட்டம் பெற்ற சிவகுமார்

கலைஞர் என்னிடம், ‘நான் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதவில்லை தம்பி. எழுதி பாஸ் செய்தால் ஐ.ஏ.எஸ். படிக்க சொல்வார்கள். எனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. அதனால் பரீட்சை எழுதாமல் தவிர்த்தேன்’ என்று என்னிடம் சொன்னார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத ஒரு இளைஞன், சங்க இலக்கியப் பாட்டுக்கு உரை எழுதி உள்ளார். அவரது வசனம் கற்பனையே பண்ண முடியாது. அந்த அளவுக்கு அமைந்துள்ளது.

அந்த இலக்கிய தாத்தாவுக்கு மகனாகப் பிறந்து இந்த மேடையில் இருக்கிற அவரின் வாரிசு, இன்றைக்குத் திறம்பட ஆட்சி செய்து, ‘காலை உணவு திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘நான் முதல்வன் திட்டம்’, ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’, ‘வீடு தேடி மருத்துவம்’ என்று எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இன்று மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் மீண்டும் இந்தப் பதவியிலே நீடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *