மீனவர்களின் நலனுக்காக ‘தனி கார்ப்பரேஷன்’ அமைக்க வலியுறுத்தப்படும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உறுதி | Sri Lanka Muslim Congress Party leader confirms that separate corporation will be established for welfare of fishermen

Spread the love

திருச்சி: இந்​தியா – இலங்கை மீனவர்​களின் நலனுக்​காக ‘மீனவர் கார்ப்​பரேஷன்’ அமைப்​பது குறித்து இலங்கை நாடாளு​மன்​றத்​தில் ஸ்ரீலங்கா முஸ்​லிம் காங்​கிரஸ் கட்சி வலி​யுறுத்​தும் என அக்​கட்​சி​யின் தலை​வர் ரவூப் ஹக்​கீம் கூறி​னார்.

இலங்​கை​யில் இருந்து திருச்​சிக்கு விமானத்​தில் நேற்று வந்த அவர் விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இலங்கை அரசின் வரவு-செலவு திட்ட விவாதம் நாடாளு​மன்​றத்​தில் அண்​மை​யில் தொடங்​கி​யுள்​ளது.

இந்த விவாதம் ஒரு மாதம் நடை​பெறும். மீனவர்​கள் குறித்த விவாதம் நடை​பெறும் நாளில் இந்​தி​யா- இலங்கை மீனவர்​கள் நலனுக்​காக ‘மீனவர் கார்ப்​பரேஷன்’ அமைக்க வேண்​டும் என்று எங்​கள் கட்சி உறுப்​பினர்​கள் நாடாளு​மன்​றத்​தில் விரி​வாகப் பேசு​வார்​கள்.

மீனவர் கார்ப்​பரேஷன் அமைப்​பது என்​பது, மீனவர் பிரச்​சினை​களைக் களைய இருதரப்​பும் கூட்​டாக செயல்​படு​வதற்​கான யோசனை​யாகும். இந்த யோசனையை இருதரப்​பும் ஏற்​றுக்​கொண்​டால், தேவையற்ற பூசல்​கள், பிரச்​சினை​களைத் தவிர்க்க முடி​யும் என நம்​பு​கிறோம்.

இலங்​கை​யின் புதிய அரசால் 2-வது முறை​யாக வரவு- செலவு திட்​டம் சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இலங்கை ஒரு மோச​மான பொருளா​தார வீழ்ச்​சி​யில் இருந்து மீண்​டு​விட்​டதற்​கான அறிகுறி, இந்த வரவு- செலவு திட்​டத்​தில் தெளி​வாக வெளிப்​பட்​டுள்​ளது. மைனஸ் 7 சதவீத​மாக வீழ்ந்​துகிடந்த பொருளா​தா​ரம், பிளஸ் 4.5 சதவீத​மாக வளர்ந்​துள்​ளது.

இலங்கை எதிர்க்​கட்​சித் தலை​வர் சஜித் பிரேம​தாசா அண்​மை​யில் இந்​தியா வந்து ஆளுங்​கட்​சி, எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள், மத்​திய அமைச்​சர்​களை சந்​தித்​தது இந்​தி​யா​வுக்​கும், இலங்​கைக்​கும் இடையே​யான நட்​புறவை வலுப்​படுத்​து​வதற்​கான நல்ல முயற்​சி. இவ்வாறு அவர் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *