மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக!

dinamani2F2025 02 162Fwjzdz47a2FP 4015756559
Spread the love

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலரும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் சாலைவலத்தின் போது பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “உங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது எங்களது அதிமுக அரசு. உங்களுடைய நிலத்தை யாராலும் தொடமுடியாது.

50 ஆண்டுகால பிரச்சினையான காவிரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்ததும் எங்களுடைய அதிமுக அரசுதான். இயற்கை சீற்றமாக புயல், வெள்ளம் வந்தபோது எல்லாம் உங்களை காத்தது அதிமுக அரசுதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *