உளுந்து கஞ்சி, சீராளம் அலங்காரி, ராகி உப்பு உருண்டை, சைவ ஈரல் மசாலா, முசுமுசுக்கை இலை அடை, முடக்கத்தான் கீரை சூப், கேழ்வரகு சர்க்கரைவள்ளிக் கிழங்கு கட்லெட், கருப்பு கவுனி அரிசி பணியாரம், குதிரைவாலி தினை அரிசி ஃபிரைடு ரைஸ், கொய்யா டெசர்ட், சம்பா கோதுமை மொமோஸ், சென்னாகுன்னி கத்தரிக்காய் தொக்கு, முருங்கை கீரை கூட்டாஞ்சோறு, சுரைக்காய் முருங்கைக்கீரை அடை, கதம்ப சட்னி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி, வெஜ் ஆம்லெட், குக்கும்பர் இட்லி, கேழ்வரகு லாமிங்டன் கேக், மிக்ஸ்டு பருப்பு புட்டு, நெய்வேத்தியம், மிச்சம் அமிர்தம், பலாக்கொட்டை லட்டு, வரகு அரிசி சோயா பிரியாணி, கருப்பு கவுனி அல்வா, தினை இடியாப்பம், கடலைக்கறி, ராகி களி என சைவம், உளுந்து கஞ்சி, ராகி உருண்டை, சோயா கைமா, சோயா உருண்டை, கேரட் அல்வா, இறால் பிராக்கோலி வறுவல், இறால் குழம்பு, அசைவம் உணவுகளை செய்து அசத்தியிருந்தனர்.

அதேபோல இனிப்பு அவல், பூரணம் கொழுக்கட்டை, வரகு சாம்பார் சாதம், சுரைக்காய் சட்னி, கிரேப் பாசி ப்ரான், லெமன் பை, சைய்யோ, மீன் வடை, கிரேப் ஆம்லெட், சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ், பனங்கிழங்கு பாயாசம்,ஆளி விதை களி,இஞ்சி சாறு,கலத்தப்பம்,கவுனி அரிசி கேசரி, பிரண்டை சட்னி,கருப்பு கவுனி அடை தோசை, வெஜ் லாலிபப், சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம், புரோட்டின் லட்டு,பாசிப்பயறு தோசை, சுரைக்காய் சட்னி, சத்துமாவு கொழுக்கட்டை, புதினா காரமுறுக்கு, முருங்கை கீரை பொரிவிளங்காய் உருண்டை, கல்யாணமுருங்கை கீரை அடை, சாலியா விதை லட்டு, சர்க்கரைவள்ளி கிழங்கு கொழுக்கட்டை, ரவை தேங்காய்ப்பால் குழி பணியாரம் என பாரம்பர்ய உணவுகளையும் மணக்க மணக்க செய்திருந்தனர்.
அவற்றை சாப்பிட்டுப் பார்த்த செஃப் தீனா, அதன் ரெசிப்பிக்களை கேட்டு தெரிந்து கொண்டார். பிப்ரவரி 14-ம் தேதி வேலூரில் 109, புதிய புறவழிச்சாலை, ஜி.ஆர்.டி ரீஜன்சி அருகில், தோட்டப்பாளையத்தில் இருக்கும் சாந்தி மஹாலிலும், மறுநாள் 15-ம் தேதி சேலத்தில் கொண்டலாம்பட்டியில் இருக்கும் சௌடேஸ்வரி மகளிர் கல்லூரியிலும் நடைபெற இருக்கிறது.