`முதலமைச்சராவதற்கு தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்!"- கூட்டணி குறித்த கேள்விக்கு செங்கோட்டையன்

Spread the love

தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “டெல்லி சிபிஐ விசாரணை தொடர்பாக  தவெக தலைவர் விஜய் அவரது பாணியில் நேற்று உரிய பதிலை கொடுத்துவிட்டார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

விஜய் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வரவேற்கிறார்கள். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் பயத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிறது. அதனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்கிற மன நிலையில் மக்கள் உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு பாதிப்பு

அந்த மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் தவெகவில் உள்ளனர்.

தவெக – தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தற்போதுவரை எந்த கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. விஜய் முதலமைச்சராக வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். துணை முதலமைச்சர் பதவியை எல்லாம் ஏற்பதற்கான வாய்ப்பே இல்லை.

விஜய்

எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்பவர்களுடன் கூட்டணி என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் அதிகளவு ஆர்ப்பரிக்கிறார்கள். இப்படிப்பட்ட எழுச்சியை நான் பார்த்ததில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *