7. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சிப்காட் வாகனத் தொழிற்பூங்கா
8. காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் சிப்காட் தொழில் பூங்கா;
9. நெமிலியில் சிப்காட் தொழில் பூங்கா.
10. கோவை மாவட்டம் கூளநாயக்கன்பட்டியில் சிப்காட் தொழில் பூங்கா
11. வேலூர் மாவட்டம் தாரப்படவேடு கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா
12. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு சிப்காட் தொழில் பூங்கா.
13.தூத்துக்குடி மாவட்டம் சில்ல நத்தம் சிப்காட் தொழில் பூங்கா.
14.கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.சாத்தனூர் SEZ சிப்காட் தொழில் பூங்கா.
15.பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் சிப்காட் தொழில் பூங்கா.
16. திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் கிராமத்தில் சிப்காட் பூங்கா
17.இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் பூங்கா.
18.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காலணி பூங்கா.
19.கோவை மாவட்டம் வாரப்பட்டியில் சிப்காட் பூங்கா.
20.தருமபுரி மாவட்டம் அதகப்பாடி சிப்காட் பூங்கா.
21. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் பூங்கா.
22. திருச்சி மாவட்டம் இலந்தைப்பட்டியில் சிப்காட் பூங்கா.
23.சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் சிப்காட் பூங்கா.
24.சேலம் மாவட்டத்தில் சேலம் ஜவுளி பூங்கா.
25. தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளம் சிப்காட் பூங்கா.
26.திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சிப்காட் பூங்கா;
27.சிவகங்கை மாவட்டம் கழனிவாசலில் சிப்காட் பூங்கா.
28.மதுரை மாவட்டம் வஞ்சி நகரத்தில் சிப்காட் பூங்கா.
29. திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் சிப்காட் பூங்கா.
30.இராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் கிராமத்தில் சிப்காட் பூங்கா
– என திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் மொத்தம் 30 சிப்காட் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1973 முதல் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் பூங்காக்களில் நடைபெறும் தொழில்களை விரிவுபடுத்திடவும், புதிய தொழில் பூங்காக்களில் புத்தம் புதிய தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்கிடவும் இதுவரை 5 ஆண்டுகளில்
816 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 816 தொழில் நிறுவனங்களுக்கும் மொத்தம் 7588.798 ஏக்கர் நிலங்களை சிப்காட் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 816 தொழிற்சாலைகளில் தூத்துக்குடி வின்பாஃஸ்ட் மின்வாகனத் தொழிற்சாலை, இராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலை, கிருஷ்ணகிரியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை முதலான பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பல தொழிற்சாலைகள் தொடர்ந்து திறக்கப்பட உள்ளன. இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று வருகின்றனர். இவற்றின் காரணமாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகச் சிறந்து விளங்குகிறது.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்”
– என அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தாம் எண்ணியபடி, தமிழ்நாடு 2030இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவார் என்பது திண்ணம்! திண்ணம்!