உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும் ஷிவானி என்ற இளம்பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, முதலிரவுக்குப்பின் மறுநாள் காலை நெடுநேரமாகியும் புதுமண தம்பதியினர் தங்கள் அறையிலிருந்து வெளியே வராததால் உறவினர்கள் கதவைத் தட்டி அவர்களை எழுப்ப முயற்சித்துள்ளனர். இந்த நிலையில், உள்ளேயிருந்து எவ்வித சமிக்ஞையும் வராததைத் தொடர்ந்து சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, கணவனும் மனைவியும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.