முதுநிலை ஆசிரியர் பணி: 2.20 லட்சம் பேர் தேர்வு எழுதினர் | Postgraduate Teaching exam

1379561
Spread the love

சென்னை: தமிழகம் முழு​வதும் 809 மையங்​களில் முது​நிலை ஆசிரியர் பணிக்​கான போட்​டித் தேர்வு நேற்று நடை​பெற்​றது. இதில் 2.20 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் பங்​கேற்​றனர்.

அரசுப் பள்​ளி​களில் முது​நிலை ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர், கணினி பயிற்​றுநர் ஆகிய பணி​களில் காலி​யாக இருந்த 1,996 இடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) கடந்த ஜூலை 10-ம் தேதி வெளி​யிட்​டது. இதற்​கான போட்​டித் தேர்வை எழுத 3,734 மாற்​றுத் திற​னாளி​கள் உட்பட 2.36 லட்​சம்பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​தனர்.

இதற்​கிடையே, முது​நிலை ஆசிரியர் பணித் தேர்​வுக்கு பாடத்​திட்​டம் மாற்​றப்​பட்​டது. இதனால், தேர்​வுக்கு தயா​ராக போதிய அவகாசம் இல்லை என்று கூறி, தேர்வை தள்​ளிவைக்​கு​மாறு கோரிக்​கைகள் எழுந்​தன. ஆனால், டிஆர்பி உறுதியாக மறுத்​து​விட்​டது. இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி முது​நிலை ஆசிரியர் பணிக்​கான தேர்வு மாநிலம் முழு​வதும் 809 மையங்​களில் நேற்று நடை​பெற்​றது. 2.20 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் எழு​தினர்.

அதாவது, விண்​ணப்​பித்​த​தில் 93.18 சதவீதம் பேர் தேர்​வில் பங்​கேற்​றனர். இதன்​மூலம் ஓரிடத்​துக்கு 110 பேர் போட்​டி​யில் உள்​ளனர். தேர்வு எழுத 16,118 பேர் வரவில்​லை. வினாத்​தாள் சற்று கடின​மாக இருந்​த​தாக பட்​ட​தா​ரி​கள்​ தெரி​வித்​தனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *