‘முத்தலாக்’ திருமணம் என்ற சமூக அமைப்புக்கு தீங்கானது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Dinamani2fimport2f20202f82f312foriginal2fcentralgovernmen.jpg
Spread the love

அதில், ‘முத்தலாக் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கடந்த 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும், முஸ்லிம் சமூகத்தில் அந்த நடைமுறையைப் பின்பற்றி செய்யப்படும் விவாகரத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. ஆகையால், முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் முஸ்லிம் பெண்களின் திருமண உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் நடைமுறை திருமணம் என்ற சமூக அமைப்புக்கு தீங்கானது. அந்த வகையில், இந்த தடைச் சட்டம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாலின நீதி மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட அரசமைப்புச் சட்ட உரிமைகளை உறுதிப்படுத்த உதவுவதோடு, அவா்களின் அடிப்படை உரிமைகளான பாகுபாடின்மை மற்றும் அதிகாரமளித்தலையும் உறுதிப்படுத்த உதவும்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *