மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை திங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூட்டணி தொடா்பாக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா அவரது கருத்தைக் கூறியுள்ளாா். கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று தலைமைக்கு தெரியும். சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரும், அமைச்சா்களும் தவறான பதில்களைத் தெரிவிக்கின்றனா்.
முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
