முன்னாள் எம்.பி. மாஸ்டர் மாதன் மறைவு

Dinamani2f2024 072f37548935 538b 4978 Af51 Ab3fb50bb7422fmasterjpg.jpg
Spread the love

தகனம்: இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம், வண்ணாங்கோவில் பிரிவில் உள்ள நித்யானந்தா எரியூட்டு மயானத்தில் அவர் உடல் சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.

ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்: முன்னாள் மக்களவை உறுப்பினர் மாஸ்டர் மாதன் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது:

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மாதன் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. சமூக சேவையில் அவரது அசாதாரண அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான அவரது இடைவிடாத முயற்சிகளும் நமது சமூகத்தில் அழியாத அடையாளத்தைப் பதித்துள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு அவருடைய அர்ப்பணிப்பு காலம்தோறும் நினைவுகூரப்படும், என்றும் போற்றப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *