மும்பையில் ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்!

Dinamani2f2024 072f8da8383f 882f 4729 97c7 73b53b94a12f2fc 1 1 Ch0164 10110658.jpg
Spread the love

கனமழையால் மும்பை ரயில் போக்குவரத்துச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரங்களும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்யாண் மற்றும் கசாரா இடையேயான பரபரப்பான ரயில் பாதையில் மரங்கள் விழுந்துள்ளதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கசாரா மற்றும் டிட்வாலா இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய ரயில்வேயின் புறநகர் சேவையை தினமும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *