அக்கும்பல் வீடியோ காலில் வந்தது. அதில் அவர்களது முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் வங்கி அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகளிடம் தொடர்ந்து ஒரு அறையில் இருக்கும்படியும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தங்களுக்குத் தகவல் கொடுக்கவேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இது ஒரு ரகசிய விசாரணை என்றும் தெரிவித்தனர்.
மேலும் சுப்ரீம் கோர்ட் மற்றும் அமலாக்கப்பிரிவு ஆவணங்களையும் அனுப்பி வைத்தனர். அதில் பணமோசடி வழக்கில் சால்வி பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து பயந்து சால்வி தனது குடும்பத்தில் உள்ள சொத்து விவரங்களைத் தெரிவித்தார்.
ஜனவரி 8 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் குடும்பத்தின் சொத்துகள் மற்றும் சொத்துகளின் விவரங்களைப் பெற்றனர். ஜனவரி 14 ஆம் தேதி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து அனுப்பியது போன்ற ஒரு கடிதத்தை அனுப்பினர். அதில் வங்கிக் கணக்கு விவரங்கள் இருந்தன.
சால்வியிடம் இருக்கும் நிதியைத் தாங்கள் அனுப்பி இருக்கும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படியும், அவற்றைச் சரிபார்க்க வேண்டியிருப்பதாகவும், நிரபராதி என்று கண்டறியப்பட்டால் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

சால்வியும் தன்னிடம் இருந்த பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். அதோடு தனது குடும்பத்து தங்க நகைகள், வைப்புத் தொகை, ஷேர்களை விற்று அல்லது அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தையும் அனுப்பி வைத்தார்.
இப்படியே மொத்தம் ரூ.1.83 கோடியை அனுப்பினார். கடந்த 11 ஆம் தேதிதான் அக்கும்பல் திடீரென சால்வி குடும்பத்தைத் தொடர்பு கொள்வதை நிறுத்தியது. அதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை சால்வி அறிந்து இது குறித்து சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.