முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

Spread the love

இதற்காக துணைக் குழுவின் தலைவரான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில், தமிழக உறுப்பினர்களான முல்லைப்பெரியாறு அணையின் கண்காணிப்புப் பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் செல்வம், கேரள உறுப்பினர்களான கண்காணிப்புப் பொறியாளர் கோஷி. கட்டப்பனை செயற்பொறியாளர் லிவின்ஸ்பாபு ஆகியோர் தேக்கடிக்கு வந்து அங்கிருந்து படகுகள் மூலம் அணைக்குச் சென்றனர்.

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

அணைப் பகுதியில், பிரதான அணையை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். பின்னர் பிரதான அணை வழியாக பேபி அணைக்கு நடந்து சென்று ஆய்வு செய்தனர்.  சுரங்கப்பகுதியில் கசிவுநீர் அளவை பார்வையிட்டனர். அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப அது இயல்பான அளவில் இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *