மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

Dinamani2f2025 01 212fi4c4xjjh2f21012 Pti01 21 2025 000233a100402.jpg
Spread the love

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

”முந்தைய ஆந்திர அரசு ஆங்கிலத்தை மட்டுமே ஊக்குவித்தது. ஆங்கிலம் மட்டும்தான் வாழ்வாதாரம் என்ற வகையில் ஊக்குவித்து வந்தது. ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்கும்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உலகளவில் பிரசித்து பெற்று வருகின்றன. மக்களுடன் எளிதில் பழகுவதற்கு ஹிந்தியை கற்றுக் கொள்வது நல்லதுதான்.

ஆந்திரத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஐந்து முதல் பத்து மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மூன்று மொழிகள் அல்ல, பல மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன். அதனை படித்து மாணவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வேலை செய்து பயன்பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *