விழுப்புரம் வீராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், மொத்த தங்க நகை வியாபாரி. சென்னையில் மொத்தமாக தங்கம் வாங்கி, அதை கம்மல், ஜிமிக்கி, செயின் போன்ற ஆபரணங்களாக செய்து கடைகளுக்கு விற்பது இவரது வழக்கம். சுமார் பத்து ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வரும் ராஜமாணிக்கம், அதற்காக தன்னுடைய வீட்டிலேயே தங்க நகை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார்.

சமீபத்தில் மூன்று கிலோ தங்கத்தில் ஆபரணங்களை செய்த ராஜமாணிக்கம், அவற்றை சென்னையில் இருக்கும் நகைக் கடைகளுக்கு விநியோகிக்க முடிவெடுத்தார். அதற்காக நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் தன் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில், ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து கொண்டு அவரை பின் தொடர்ந்து சென்ற ஒன்பது பேர் கொண்ட கும்பல், கோட்டைவி நாயகர் கோயிலுக்கு அருகில் வழிமறித்து நிறுத்தினார்கள்.