சென்னை மெட்ரோ ரயிலில் டிஜிட்டல் பயணச்சீ ட்டை (எஸ்விபி) பயன்படுத்தினால் 20 சதவீத பயணக் கட்டணச் சலுகையைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2022 ஆண்டு நவம்பா் முதல் டிஜிட்டல் பயணச்சீட்டை (எஸ்விபி) அறிமுகப்படுத்தியது. அனைத்து மெட்ரோ பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூா்வ கைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைபேசி செயலி மூலம் மட்டுமே வாங்க முடியும்.