மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஊழல் விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு | Corruption Awareness Week observed by Metro Rail Corporation

1381226
Spread the love

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் சார்​பில், ஊழல் கண்​காணிப்பு விழிப்​புணர்வு வாரம் நந்​தனத்​தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலு​வல​கத்​தில் அனுசரிக்​கப்​பட்​டது ஊழல் கண்​காணிப்​புக்​கான நாட்​டின் உச்ச அமைப்​பாக மத்​திய கண்காணிப்புக் குழு உள்​ளது.

இந்த குழு சார்​பில், பொது வாழ்​வில் நேர்​மை​யின் முக்​கி​யத்​து​வத்தை வலி​யுறுத்​தி, ஒவ்​வொரு ஆண்​டும் ஊழல் கண்​காணிப்பு விழிப்​புணர்வு வார நிகழ்ச்சி நடத்​தப்​படு​கிறது. அந்த வகை​யில், இந்​தாண்​டும் ஊழல் கண்​காணிப்பு விழுப்​புணர்வு வாரம் தொடங்கி நடை​பெறுகிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் சார்​பில், நந்​தனத்​தில் உள்ள அலு​வல​கத்​தில் ஊழல் கண்​காணிப்பு விழுப்​புணர்வு வாரம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இந்த விழுப்​புணர்வு வாரம் நவ.2-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்​நிகழ்​வு, “விழிப்​புணர்​வு: நமது கூட்​டுப் பொறுப்​பு” என்ற கருப்​பொருளை அடிப்​படை​யாகக் கொண்டு நடை​பெறுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் மு.அ.சித்​திக் தலை​மை​யில், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்தின் இயக்​குநர்​கள் எஸ். கிருஷ்ண​மூர்த்தி (நி​தி), மனோஜ் கோயல், (அமைப்​பு​கள் மற்​றும் இயக்கம்), உயர் அலு​வலர்​கள் மற்றும் பணி​யாளர்​கள் பங்​கேற்​பு, ஒரு​மைப்​பாடு உறு​தி​மொழியை ஏற்​றனர். ஊழல் கண்​காணிப்​பின் முக்​கி​யத்​து​வம் குறித்து ஊழியர்​கள் மற்​றும் பிற பங்​கு​தா​ரர்​களிடையே விழிப்​புணர்வை ஏற்​படுத்த, இந்த வாரம் முழு​வதும் பல்​வேறு விழிப்​புணர்​வு நிகழ்​ச்​சிகளை நடத்​த சென்​னை மெட்​ரோ ரயில்​ நிறு​வனம்​ திட்​ட​ மிட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *