சிலருக்கு கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பை வாய்ப்பகுதியிலோ புற்றுநோய் வரலாம். இதனாலும் ப்ளீடிங் வரலாம். எனவே, மெனோபாஸுக்கு பிறகு ப்ளீடிங் ஏற்பட்டால் முழுமையான பரிசோதனை அவசியம். முதலில் பொதுவான பரிசோதனை, அடுத்து வெஜைனா பகுதியில் பரிசோதனை, கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கான பரிசோதனை செய்து கட்டிகளோ, புற்றுநோய்க்கான அறிகுறிகளோ தென்படுகின்றனவா என்று பார்ப்போம். புற்றுநோய்க்கான பாப் ஸ்மியர் டெஸ்ட்டும் செய்யப்படும்.

கர்ப்பப்பையின் உள்பகுதியான எண்டோமெட்ரியத்தின் உள் லேயர் எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது என்றும் பார்க்கப்படும். மெனோபாஸுக்கு பிறகு இது மெலிந்தே இருக்கும். ஒருவேளை அடர்த்தியாக இருந்தால் புற்றுநோய் அறிகுறியாக இருக்குமோ என அந்தப் பகுதியை பயாப்சி பரிசோதனைக்கு அனுப்புவோம். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்தால்தான் காரணம் அறிந்து சிகிச்சை எடுக்க முடியும். புற்றுநோயாக இருக்கும் என்ற பயத்தில் அதைத் தவிர்ப்பது சரியானதல்ல. அப்படியே புற்றுநோயாகவே இருந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்திவிட முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.