மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்படுகிறதா? – கேள்வியெழுப்பும் மீனவர்கள் | My Vikatan article about demerits of Blue Flag certification of Marina beach

Spread the love

மறுபுறம், மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப‌ மாற்றியமைக்கப்பட்டால் தற்போது இருப்பதைப் போல உழைக்கும் மக்களால் அங்கு சென்று பொழுதுபோக்க முடியாது. விலைவாசி உயர்வு, உழைக்கும் மக்களை அச்சுறுத்தும் கட்டுப்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என மெரினா கடற்கரை உழைக்கும்வர்க்கத்திடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, திறந்த வெளி வணிக வளாகத்தை போல மாற்றியமைக்கப்படும் அச்சம் ஏற்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரை

மெரினாவில் நீலக்கொடி திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்தி சிலை முதல் லூப் சாலையில் நொச்சி நகர் வரை 30 ஏக்கர் பரப்பளவில், திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய கடற்கரைகளுக்கான இரண்டாம் கட்டத் திட்டத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனால், சென்னையில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து கடந்த செப்டம்பர் 26 அன்று 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கடலில் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களுக்கு போராடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இதுவரை இந்தியாவில் உள்ள 12 கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் சென்னையின் கோவளம் கடற்கரையும் அடங்கும். அவ்வகையில் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் நீலக் கொடி அங்கீகாரம் பெறும் நோக்கில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காவல் நிலை மாற்ற அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

 ஏற்கனவே மெரினா கடற்கரை கடலூரின் சில்வர் கடற்கரை காமேஸ்வரம் கடற்கரை நாகப்பட்டினம், அரியமான் கடற்கரை ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதனை இன்னும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையில் திருவான்மியூர் பாலவாக்கம் முத்தண்டி மற்றும் தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் அடுத்ததாக கீழ் புதுப்பட்டு (விழுப்புரம்) சாமியார் பேட்டை (கடலூர்) உள்ளிட்ட கடற்கரையில் நீலக்குடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

 நகரமயமாக்கல் திட்டங்களின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பூர்வ குடி மக்களிடமிருந்து நகரம் பறிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்படுகிறது. பழங்குடியின மக்களிடமிருந்து காடு மலைகள் பறிக்கப்படுகிறது அதேபோல் நீலக் கொடி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 100க்குடி மீனவ மக்களிடம் இருந்து கடல் பறிக்கப்படுகிறது.

கடல் காடு நகரம் அனைத்தும் கார்ப்பரேட்களுக்கு தாரைவாக்கப்பட்டு மண்ணின் மைந்தர்களான கூறக்கூடிய மக்கள் அகதியாக்கப்படுகின்றனர். இதற்கு எதிரான அறவழிப்போராட்டத்தை கட்டமைப்பதன் மூலமாகத்தான் நம் வருங்கால சந்ததிகள் அமைதியாக வாழ இயலும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *