மெளனம் பேசியதே: 'ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல' – ரீ-ரிலீஸ் குறித்து சூர்யா

Spread the love

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘மௌனம் பேசியதே’.

காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் ‘மௌனம் பேசியதே’ படம் குறித்து சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மௌனம் பேசியதே
மௌனம் பேசியதே

அதில் பேசியிருக்கும் சூர்யா, ” ‘நல்லாதானடா இருந்தீங்க… திடீர்னு எங்கிருந்துடா வருது இந்த காதல்? ‘, ‘காதல் கண்ணிலிருந்து வரக்கூடாது… இதயத்திலிருந்து வரணும்’, ‘தனி மரம் தோப்பாகாது’ என இந்த மாதிரி பல டயலாக்ஸை வாட்சப் ஸ்டேடஸ், இன்ஸ்டாகிராம் ரீலிஸ்’ன்னு எல்லாத்துலையும் பார்த்திட்டு வரேன்.

20 வருஷத்துக்கு முன்னாடி ரிலீஸ் ஆன ‘மௌனம் பேசியதே’ படம் இப்ப வரைக்கும் பலருக்கும் பிடிச்ச படமா இருக்குது. இயக்குநர் அமீரின் முதல் படம். என்னுடைய சிறந்த படங்கள்-ல இதுவும் ஒன்று. த்ரிஷா, லைலா, நேஹா என 3 ஹீரோயின்ஸ் நடிச்சிருந்தாலும் யாரையும் கட்டிப்பிடிக்காமலேயே உருவானக் காதல் படம்.

சூர்யா
சூர்யா

ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்ல. 23 வருஷங்களுக்கு பிறகு அமீர் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்றாரு. நானும் காத்திருக்கேன். சீக்கிரம் தியேட்டர்-ல சந்திப்போம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *