மேகாலயாவில் அதிகரித்த HIV பாதிப்பு; அதிர்ச்சிக்குள்ளாக்கும் புள்ளி விவரம்! – அமைச்சர் சொல்வதென்ன?

Spread the love

மேகாலயாவில் வெளியாகியிருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை தரவு, அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக ஹெச்.ஐ.வி பாதிப்பு கொண்ட மாநிலமாக மேகாலயா இருக்கிறது.

இது தொடர்பாக மேகாலயா சட்டப்பேரவையில் பேசியிருக்கும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா, “2026 ஜனவரி 26 கணக்குப்படி மேகாலயாவில் 10,293 நபர்கள் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஹெச்.ஐ.வி
ஹெச்.ஐ.வி

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த நோய் பாதிப்பால் 749 இறந்துள்ளனர். மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது அதிகபட்சமாக கிழக்கு காசி மலை பகுதியில் 435 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

மேகாலயாவில் ஹெச்.ஐ.வி-க்கு 392 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்கள் உள்ளன. நான்கு மொபைல் மையங்களும் செயல்பாட்டில் உள்ளன.

ஹெச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. ஹெச்.ஐ.வி பாதிப்பு குறித்து விவாதிக்க பிரத்யேக சட்டமன்ற மன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா
சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா

ஹெச்.ஐ.வி என்பது இனி மரணத்தண்டனை அல்ல. முறையான சிகிச்சை மூலம் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *