மேட்ச் பிக்சிங் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: போட்டிகளில் விளையாட  ஐசிசி அதிரடி தடை – Kumudam

Spread the love

அமெரிக்காவின் முன்னணி வீரர் ஆரோன் ஜோன்ஸ், சூதாட்டப் புகாரில் சிக்கி ஐசிசி-யால் அதிரடியாகத் தடை செய்யப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் போன்ற ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி, அமெரிக்காவை ‘சூப்பர் 8’ சுற்றுக்கு அழைத்துச் சென்ற வீரருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கில் பிறந்த 31 வயதான ஆரோன் ஜோன்ஸ், இதுவரை அமெரிக்க அணிக்காக 52 ஒருநாள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். கடந்த 2023-24 சீசனில் பார்படாஸில் நடைபெற்ற ‘பிம்10’ லீக் தொடரில் இவர் பங்கேற்றார். இந்தத் தொடரின் போதுதான் அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும், ஐசிசி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆரோன் ஜோன்ஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. சூதாட்டத் தரகர்கள் தன்னை அணுகியது குறித்த தகவல்களை முறையான அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்தது மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுத்தது போன்ற காரணங்களுக்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் நேர்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கருதி, ஐசிசி அவரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தர பிறப்பித்துள்ளது. 

இந்தத் தற்காலிகத் தடையைத் தொடர்ந்து, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க ஆரோன் ஜோன்ஸிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 28 முதல் அடுத்த 14 நாட்களுக்குள் அவர் தனது விளக்கத்தை ஐசிசி-யிடம் அளிக்க வேண்டும். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில், இந்த இடைக்காலத் தடை நிரந்தரத் தடையாக மாறுமா அல்லது அவர் விடுவிக்கப்படுவாரா என்பது ஐசிசி கையில் தான் இருக்கிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *