மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 17,906 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 21,135 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 16,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பைவிட நீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அணை நீர்மட்டம் நேற்று 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டிஎம்சியாகவும் இருந்தது.