மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

Spread the love

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியாக குறைந்தது.

நீர்வரத்து சரிந்த காரணத்தால் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

கிழக்கு – மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மதகுகள் 2 நாள்களுக்கு பிறகு மூடப்பட்டன.

மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் இன்று 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *